ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் இன்று தொடங்குகிறது
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் பல்வேறு பூஜைகளின்போது அர்ச்சகர்கள், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக ஒவ்வொரு ஆண்டும் பவித்ரோற்சவம் நடப்பது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி 5 நாட்களுக்கு கோவிலில் நடக்கும் 4 கால அபிஷேகங்களில் 3-வது கால அபிஷேகமும், 20-ந்தேதி கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப்பூஜை வழக்கம்போல் நடக்கிறது எனக் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்தார்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி 5 நாட்களுக்கு கோவிலில் நடக்கும் 4 கால அபிஷேகங்களில் 3-வது கால அபிஷேகமும், 20-ந்தேதி கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப்பூஜை வழக்கம்போல் நடக்கிறது எனக் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்தார்.