செய்திகள்
டிரைவர் மாயம்

குற்றாலத்துக்கு சுற்றுலா சென்ற டிரைவர் காருடன் மாயம்

Published On 2019-09-11 08:41 GMT   |   Update On 2019-09-11 08:41 GMT
குற்றாலத்துக்கு சுற்றுலா காருடன் டிரைவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

அசோக் நகர் 35-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர். கார் வாடகைக்கு கொடுத்து வந்தார். இவர் அசோக் நகர் உதவி கமி‌ஷனர் ராதா கிருஷ்ணனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த நாகநாதன் என்பவர் கடந்த 10 வருடங்களாக என்னிடம் தங்கி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் மூலம் குரோம்பேட்டையில் இருந்து வாடிக்கையாளர்கள் 2 பேரை காரில் ஏற்றிக் கொண்டு திருச்சி மற்றும் குற்றாலம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றார்.

7-ந்தேதி செல்போனில் என்னை தொடர்பு கொண்ட நாகநாதன் 8-ந்தேதி சென்னைக்கு வந்து விடுவதாக கூறினார். ஆனால் 8-ந்தேதி காலை அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு உள்ளது. காருடன் மாயமான நாகநாதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து காரை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News