செய்திகள்
கொரோனா பரிசோதனை

டெல்லியில் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா: இன்று புதிதாக 3,229 பேர் பாதிப்பு

Published On 2020-09-14 13:09 GMT   |   Update On 2020-09-14 13:09 GMT
டெல்லியில் இன்று மூன்று எம்.எல்.ஏ.-க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 3,229 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அதிகரித்த நேரத்தில் டெல்லி மாநிலம் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. விரைவான பரிசோதனை, நோய் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் வேலைகளை சிறப்பாக செய்தது. அதனால் தினந்தோறும் பாதிப்படும் நபர்களின் எண்ணிக்கை 700-க்குள் கீழ் வந்தது.

ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு வருவதால், கடந்த 20 நாட்களுக்கு மேலாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இன்று புதிதாக 3,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 2,21,533 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,88,122 பேர் குணமடைந்துள்ளனர். 28,641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை 4770 ஆக உள்ளது.

இன்று மூன்று எம்எல்ஏ-க்கள் (கிரிஷ் சோனி, பிரமிளா டோகாஸ், வினேஷ்  ரவி) பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சட்டசபை ஸ்டாஃப்கள் மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News