செய்திகள்
கொரோனா தடுப்பூசி

சிவகங்கை அருகே கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-06-07 17:09 GMT   |   Update On 2021-06-07 17:09 GMT
சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் நகரத்தார் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி சங்க நிர்வாகி சம்பத் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை:

சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் நகரத்தார் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி சங்க நிர்வாகி சம்பத் தலைமையில் நடைபெற்றது. அலவாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல் வரவேற்றார். முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு டாக்டர்கள் கார்த்திக், ஜீவபாரதி தலைமையிலான மருத்துவக்குழுவினர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

பின்னர் நகரத்தார் சார்பில் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்திற்கான காசோலையை சிவகங்கை தாசில்தார் தர்மலிங்கம் பெற்றுக்கொண்டார். இதில் நகரத்தார்கள் சார்பில் சிதம்பரம், கண்ணப்பன், சுப்பையா, ஊராட்சி மன்றத்தலைவர் பிரகாசம், கிராம நிர்வாக அலுவலர்கள் மூர்த்தி, சவுமியநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News