செய்திகள்
மம்தா தலைமையில் நடந்த பேரணி

மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி

Published On 2021-03-07 10:34 GMT   |   Update On 2021-03-07 10:34 GMT
மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் பெண்கள் பேரணியாக சென்றனர்.
சிலிகுரி:

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை வீழ்த்திவிட்டு இந்த தடவை ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்துவருகிறார்.

இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதைக் கண்டித்து சிலிகுரியில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மம்தா பானர்ஜி தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் பேரணியாக சென்றனர்.

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News