ஆன்மிகம்
முப்பந்தல் இசக்கியம்மன்

முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் மலர் முழுக்கு விழா

Published On 2021-02-08 03:31 GMT   |   Update On 2021-02-08 03:31 GMT
முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில் (கிழக்கு) மலர் முழுக்கு விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது.
முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில் (கிழக்கு) மலர் முழுக்கு விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை திருவிளக்கு பூஜை நடக்கிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம் நடக்கிறது. இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொள்கிறார். தொடர்ந்து 7 மணிக்கு கும்பாபிஷேகம், 11.30 மணிக்கு பஜனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், 1 மணிக்கு உச்சிகால பூஜை, அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், இரவு 7 மணி முதல் 11 மணி வரை மலர் முழுக்கு போன்றவை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் பக்தர்கள் சேவா சங்க தலைவர் கோலப்பன் மற்றும் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News