உலகம்
மரணம்

வங்காளதேசத்தில் ரெயில் மோதி 3 குழந்தைகள் பலி

Published On 2021-12-09 00:31 GMT   |   Update On 2021-12-09 00:31 GMT
ரெயில் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகளும், அவர்களின் உறவுக்காரரும் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாக்கா:

வங்காளதேசத்தின் வடக்கு பகுதியில் உள்ள நிபல்பாரி மாவட்டம் பவு பஜார் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 3 குழந்தைகள் தங்களின் வீட்டுக்கு அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் விளையாடி கொண்டிருந்தன.

அப்போது தண்டவாளத்தில் ரெயில் ஒன்று வேகமாக வந்தது. இதனை அறியாத குழந்தைகள் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தன. இதை பார்த்து பதறிப்பான குழந்தைகளின் உறவுக்காரர் ஒருவர் ஓடி சென்று குழந்தைகளை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் அதிக வேகத்தில் வந்த ரெயில் குழந்தைகள் மற்றும் அவர்களை காப்பாற்ற வந்த உறவுக்காரர் மீது பயங்கரமாக மோதியது. இதில் குழந்தைகளின் உறவுக்காரர் தண்டவாளத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்ட நிலையில், 3 குழந்தைகளும் ரெயில் சக்கரங்களில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தன.

அதே போல் இந்த விபத்தில் காயமைடந்த குழந்தைகளின் உறவுக்காரர் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ரெயில் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகளும், அவர்களின் உறவுக்காரரும் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News