வழிபாடு
பக்தவத்சல பெருமாள்

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் கருட சேவை

Published On 2022-03-23 08:55 GMT   |   Update On 2022-03-23 08:55 GMT
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) தேர்த் திருவிழா நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திரு நின்றவூரில் உள்ள பக்த வத்சல பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வருடமும் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தங்கக் கருடசேவை நேற்று நடைபெற்றது. அதி காலை 3.30 மணியளவில் வண்ண மலர்களால் அலங் கரிக்கப்பட்ட பக்தவத்சல பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி னார். தொடர்ந்து கோபுர தரிசனம் நடைபெற்றது.

பின்னர் 4 மாட வீதிகளில் தங்கக் கருட வாகனத்தில் பக்தவத்சல பெருமாள் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8 மணியளவில், அனுமந்த வாகனத்தில் பக்தவத்சல பெருமாள் வீதிஉலா சென்றார். விழாவில் திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, திருவள்ளுர், தாமரைப் பாக்கம் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) காலை பக்த வத்சல பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழா நடைபெற உள்ளது.
Tags:    

Similar News