செய்திகள்
நத்தத்தில் முதல்வர் பங்கேற்ற பிரசார கூட்டத்துக்கு பதாகைகளுடன் வந்த அரியர் மாணவர்கள்.

தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்ற அரியர் மாணவர்கள்

Published On 2021-03-25 04:11 GMT   |   Update On 2021-03-25 08:35 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் இரா.விசுவநாதனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். தொண்டர்கள் மத்தியில் அவர் பேசிக் கொண்டு இருந்த போது கல்லூரி மாணவர்கள் பலர் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோ‌ஷம் எழுப்பினர்.

அரியர் பாய்ஸ் நாங்கள்.. எங்கள் சாய்ஸ் நீங்கள்.. அரியர் பசங்க நாங்க.. எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே.. என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. கல்லூரி தேர்வின் போது அரியர் வைத்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த பதாகைகளை காட்டி அவர்கள் வரவேற்றனர்.

மேலும் முதலமைச்சர் பிரசாரம் செய்து கொண்டு இருந்த போது ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்தது. இதனை கவனித்ததும் அவர் உடனடியாக தனது பிரசாரத்தை நிறுத்தினார். கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ஆம்புலன்சுக்கு உடனடியாக செல்ல வழி விடுமாறு பொதுமக்களை பார்த்து தெரிவித்தார். அதன் பின் பொதுமக்கள் வழிவிடவே ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
Tags:    

Similar News