உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் பாதுகாப்பு படைகள்.

அரக்கோணம் தொழிற் பாதுகாப்பு மையத்தில் பயிற்சி முடித்த வீரர்களுக்கு சான்றிதழ், விருதுகள்

Published On 2022-04-17 09:22 GMT   |   Update On 2022-04-17 09:22 GMT
அரக்கோணம் தொழிற் பாதுகாப்பு மையத்தில் பயிற்சி முடித்த வீரர்களுக்கு சான்றிதழ், விருதுகள் வழங்கப்பட்டது.
நெமிலி:

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

இங்கு பயிற்சி முடித்த வர்கள் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டடங்கள், புராதான சின்னங்கள் போன்ற வைகளின் பாதுகாப்பு முதன்மை பணி களுக்கு ஈடுபடுத்த படுவர். 

இந்நிலையில் கடந்த 6 மாதமாக, காவலர்கள், சமையல் காரர்கள், ஸ்வீப்பர், தச்சர், பிளம்பர், எலக்ட்ரிஷியன், பெயிண்டர் உட்பட 8 படைப்பிரிவுகளுக்கான 316 பேர் பயிற்சி பெற்று வந்தனர். அதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய தொழிற் பாதுகாப்பு படை டிஐஜி சாந்தி ஜி.ஜெய்தேவ் கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். 

பின்னர், வீரர்களிடையே பேசியே போது நாட்டின் பாதுகாப்பில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் பங்கு இன்றியமையாதது. 

எனவே இதில் பணியாற்றும் ஒவ்வொரு வீரரும் தேசத் திற்காக தேசப்பற்றுடன் இருக்க வேண்டும். எத்தகைய சூழ்நிலையிலும் எதிர் கொள்ள கூடியவர்களாக இருக்க வேண்டும். என்றார். 

தொடர்ந்து பயிற்சியின் சிறந்து விளங்கியவர் களுக்கான விருதுகள் இன்டோர் பெஸ்ட்க்கு வெங்கட பிரபாகர், துப்பாக்கி சுடுதல் சௌல்ருலா கிரன், வெளிப்புற சிறந்தமைக்கு குமார் நோட்லா, அனைத்து பயிற்சியிலும் சிறந்து விளங்கிய காவலருக்கு தீபக் ஈஸ்வர் மற்றும் முதன்மை கோப்பை சந்தன் யாதவ் ஆகியோருக்கு சான்றிதழ்கள், கோப்பை வழங்கி பாராட்டினார். 

இதனையடுத்து வீரர்களின் வீர சாகசங்கள், யோகா மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அணிவகுப் புக்கான விருந்தினர் கமாண்டன்ட் கவுரவ் தோமர், ஐ.என்.எஸ். ராஜாளி கமாண்டர் அபினீத் பட்டாச்சார்யா, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையின் சீனியர் கமாண்டன்ட் ரேகா நம்பியார், மாநில நிர்வாக அதிகாரிகள் அணிவகுப்பு தளபதி சந்தன் யாதவ், குமார் நோட்லா உள்ளிட்ட அதிகாரிகளும், மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News