ஆன்மிகம்
முத்தியால்பேட்டை பொன்னுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
முத்தியால்பேட்டைபொன்னுமாரியம்மன் கோவில் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கலசங்களிலும், பொன்னு மாரியம்மன் மூலஸ்தானத்திலும் புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முத்தியால்பேட்டை வேலாயுதம்பிள்ளை நகரில் பிரசித்திபெற்ற பொன்னு மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து கடந்த 13-ந்தேதி கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நேற்று முன்தினம் வரை 5 கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது. நேற்று (வியாழக்கிழமை) காலை 6-ம் கால யாகசாலை பூஜையும், ரக்ஷாபந்தனம், தத்துவார்ச்சனையும் அதைத்தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடும் நடந்தது.
இதையடுத்து ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கலசங்களிலும், பொன்னு மாரியம்மன் மூலஸ்தானத்திலும் புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.
விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி தலைவர் மோகன், நாட்டாண்மை சுந்தரராஜா, தர்மகர்த்தா பழனிசாமி, பொருளாளர் உதயணன் மற்றும் சிவாச்சாரியார்கள் திருஞானசம்பந்தம், சிவராஜ், அர்ச்சகர் சாய்நாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
இதையடுத்து ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கலசங்களிலும், பொன்னு மாரியம்மன் மூலஸ்தானத்திலும் புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.
விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி தலைவர் மோகன், நாட்டாண்மை சுந்தரராஜா, தர்மகர்த்தா பழனிசாமி, பொருளாளர் உதயணன் மற்றும் சிவாச்சாரியார்கள் திருஞானசம்பந்தம், சிவராஜ், அர்ச்சகர் சாய்நாதன் ஆகியோர் செய்திருந்தனர்.