செய்திகள்
வாணியம்பாடியில் பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள்
வாணியம்பாடியில் பெண்ணிடம் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி-கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வழியாக கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு வேகமாக சென்றனர். பஷீராபாத் பகுதியில் புதிதாக கால்வாய் கட்டுவதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தனர். இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் திருடன்.. திருடன்... என கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கொள்ளையர்களை துரத்திச் சென்றனர்.
இதனால் மர்ம நபர்கள் பள்ளத்தில் விழுந்த மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மா்ம நபர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.