செய்திகள்
கைது

வேதாரண்யத்தில் அண்ணன்-தங்கையை தாக்கியவர் கைது

Published On 2020-11-24 05:13 GMT   |   Update On 2020-11-24 05:13 GMT
வேதாரண்யத்தில் அண்ணன்-தங்கையை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலம் மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது38). விவசாயி. இவருடைய தங்கை மணிமேகலை வேதாரண்யத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் இருந்து வெளியே வந்தபோது கருப்பம்புலத்தை சேர்ந்த செல்லத்துரை (42) என்பவர் மணிமேகலையை தரக்குறைவாக பேசி தாக்கி உள்ளார். இதை தட்டிக்கேட்ட தியாகராஜனையும் செல்லத்துரை தரக்குறைவாக பேசி தாக்கி உள்ளார். இதுகுறித்து தியாகராஜன் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர்.
Tags:    

Similar News