செய்திகள்
பழுதடைந்த மருத்துவமனை கட்டிடம்.

வெள்ளகோவிலில் மருத்துவமனை கட்டிடத்தை புதுப்பிக்க கோரிக்கை

Published On 2021-09-13 09:11 GMT   |   Update On 2021-09-13 09:11 GMT
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொரோனா பரிசோதனைக்கும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் பொதுமக்கள் வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.
வெள்ளகோவில்;

வெள்ளகோவிலில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள பொதுமக்கள், ஏழை எளியோர் வந்து பயன் பெற்று வருகின்றனர். 

தற்போது கொரோனா தொற்று இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொரோனா பரிசோதனைக்கும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. 

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மிகவும் பழுதடைந்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை புதுப்பித்தோ அல்லது முற்றிலும் அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என தன்னார்வ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News