உள்ளூர் செய்திகள்
கலைஞர் நினைவிடம்

மெரினாவில் ரூ.35 கோடியில் கலைஞர் நினைவிடம்- டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Published On 2021-12-01 17:21 GMT   |   Update On 2021-12-01 17:21 GMT
சென்னை மெரினாவில் ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்படும் கலைஞர் நினைவிடத்திற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை:

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

இதனையடுத்து, ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்படும் கலைஞர் நினைவிடத்திற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. வருகின்ற டிசம்பர் 28ம் தேதி வரை கலைஞர் நினைவிடத்துக்கான டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News