செய்திகள்
கொரோனா வைரஸ்

வடபாதிமங்கலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

Published On 2021-05-17 10:46 GMT   |   Update On 2021-05-17 10:46 GMT
வடபாதிமங்கலத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் சித்தரஞ்சன் ஆலோசனையின் பேரில் கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று வடபாதிமங்கலம் பகுதிகளில் உள்ள புனவாசல், கிளியனூர், சோலாட்சி, உச்சுவாடி, பூசங்குடி, மாயனூர், எள்ளுக்கொல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
Tags:    

Similar News