ஆன்மிகம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து சென்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அனுமதி: சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

Published On 2021-10-19 05:17 GMT   |   Update On 2021-10-19 05:17 GMT
பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடந்து சென்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த ேகாவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடந்தது. கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடந்து சென்றனர்.

கோவில் பகுதி மேற்கு தொடர்ச்சி மலைபில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பக்தர்கள் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. காலை 10 மணி அளவில் வனத்துறை கேட் மூடப்பட்டது. பின்னர் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், இளநீர் சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News