செய்திகள்
சோதனை நடத்தப்பட்ட அலுவலகம்

கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

Published On 2021-10-14 07:06 GMT   |   Update On 2021-10-14 07:06 GMT
கோவை கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் சூர்யாவிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், உதவி இயக்குனர் சூர்யாவிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News