செய்திகள்
விபத்து பலி

காரமடை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2021-10-10 10:31 GMT   |   Update On 2021-10-10 10:31 GMT
காரமடை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

காரமடை அருகே உள்ள அன்னூர் சத்யாநகரை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 25).  கூலிதொழிலாளி. இவரது நண்பர் சின்னமருது. சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் காரமடையில் இருந்து அன்னூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிக்கராம்பாளையம் பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த ஜே.சி.பி மீது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த சரத்குமார் சம்பவ இடத்திலேயே பலியானர். சின்னமருது காயத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News