செய்திகள்
கோப்புபடம்

முன்னாள் பெண் ஒன்றிய கவுன்சிலரிடம் தகராறு செய்த 6 பேர் மீது வழக்கு

Published On 2021-04-30 14:40 GMT   |   Update On 2021-04-30 14:40 GMT
சிவகாசியில் முன்னாள் பெண் ஒன்றிய கவுன்சிலரிடம் தகராறில் ஈடுபட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள ஜமீன்சல்வார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வைதேவி (வயது 50). முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவர் சிவகாசி குற்றவியல் நடுவர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த ஆறுமுகச்சாமியின் மகன் கனகரத்தினம் எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் குழாயை உடைத்துவிட்டார். பின்னர் இரவு 7 மணிக்கு எனது வீட்டிற்கு வந்து என்னிடம் தகராறு செய்தார். அதை தட்டி கேட்ட எனது மகனின் இடதுகை ஆள்காட்டி விரலை கடித்துவிட்டார். மேலும் கழுத்தில்அணிந்து இருந்த தங்கநகையை பறித்துக்கொண்டார். அவருடன் அவரது உறவினர்கள் பாப்பா, தீபா, அருண்குமார், சவுந்திரபாண்டியன், கதிரேசன் ஆகியோரும் இருந்தனர். தகராறை தட்டிக்கேட்ட என்னை 6 பேரும் கீழே தள்ளி விட்டனர். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

மனுவை விசாரித்த கோர்ட்டு சிவகாசி கிழக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News