ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட அனுமதி

Published On 2021-01-07 04:55 GMT   |   Update On 2021-01-07 04:55 GMT
7 மாதங்களுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நேற்று அனுமதி வழங்கியது.
திருமலை 

கொரோனா பரவலால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஜூன் மாதம் 7-ந்தேதி வரை அனைத்துப் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஜூன் மாதம் 8-ந்தேதியில் இருந்து மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டுதல் படி இலவச தரிசன பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் 7 மாதங்களுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நேற்று அனுமதி வழங்கியது. அதன்படி நெற்று காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 7.30 மணி வரையிலும் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News