ஆன்மிகம்
அம்மாப்பேட்டை உத்திராபதீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா
அம்மாப்பேட்டையில் உத்திராபதீஸ்வரர் கோவிலில் 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நிறைவு விழாவையொட்டி கோவிலில் உள்ள உத்திராபதீஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
அம்மாப்பேட்டையில் உத்திராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழாவையொட்டி கோவிலில் உள்ள உத்திராபதீஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து மாலை உத்திராபதீஸ்வரருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகி துரைராஜன், பொறியாளர் சண்முகம் உள்ளிட்ட சிவனடியார்கள் கலந்துகொண்டு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினர்.
முன்னதாக கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் திருவடி குடில் சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி துரைராஜன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து மாலை உத்திராபதீஸ்வரருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகி துரைராஜன், பொறியாளர் சண்முகம் உள்ளிட்ட சிவனடியார்கள் கலந்துகொண்டு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினர்.
முன்னதாக கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் திருவடி குடில் சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி துரைராஜன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.