செய்திகள்
அதிமுகவின் தேர்தல் அறிக்கை பொதுநலன் சார்ந்தது- ஜி.கே.வாசன் பாராட்டு
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு முன்பு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஏமாற்றும் அறிவிப்பு, தோற்றுப்போகும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கை இயற்கையானது. பொதுநலன் சார்ந்தது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை செயற்கையானது. சுயநலன் சார்ந்தது.
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு முன்பு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஏமாற்றும் அறிவிப்பு, தோற்றுப்போகும். அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை, அறிவிப்புகளை, செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை வாரி வழங்கி இருக்கிறது. தமிழக மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது.
எனவே அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மூலம் அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெறும். இதன் மூலம் வளமான தமிழகம் வலிமையான பாரதம் அமையும். எனவே அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை த.மா.கா. சார்பில் வரவேற்று பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.