செய்திகள்
ராஜபாளையம் அருகே கஞ்சா விற்றவர் கைது
ராஜபாளையம் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே அய்யனாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கீழராஜகுலராமன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் ஸ்டாப் அருகில் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அதேபகுதியைச் சேர்ந்த அறிவு குமார் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அறிவு குமாரை கைது செய்தனர்.