செய்திகள்
லாரிக்கு அடியில் தூங்கியபோது லாரி சக்கரம் ஏறி கிளீனர் நசுங்கி பலி
கோவை அருகே லாரி அடியில் தூங்கிய கிளீனர் சக்கரம் ஏறி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ரகுத்தூர் சிங் (வயது43) லாரி கிளீனர். இவர் சம்பவத்தன்று கிணத்துக்கடவு அருகே லாரிகள் நிறுத்தி வைக்கப்படும் பகுதியில் ஒரு லாரியின் முன் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அந்த லாரியை டிரைவர் மகேஷ் சர்மா எடுத்தார். அவர் லாரியின் அடியில் ரகுத்தூர் சிங் தூங்கி கொண்டிருப்பதை கவனிக்கவில்லை. இதில் கண் இமைக்கும் நேரத்தில் ரகுத்தூர் சிங் மீது லாரி ஏறி இறங்கியது.
இதில் அவர் உடல் நசுங்கி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு மகேஷ் சர்மா லாரியை நிறுத்தினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ரகுத்தூர் சிங் (வயது43) லாரி கிளீனர். இவர் சம்பவத்தன்று கிணத்துக்கடவு அருகே லாரிகள் நிறுத்தி வைக்கப்படும் பகுதியில் ஒரு லாரியின் முன் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அந்த லாரியை டிரைவர் மகேஷ் சர்மா எடுத்தார். அவர் லாரியின் அடியில் ரகுத்தூர் சிங் தூங்கி கொண்டிருப்பதை கவனிக்கவில்லை. இதில் கண் இமைக்கும் நேரத்தில் ரகுத்தூர் சிங் மீது லாரி ஏறி இறங்கியது.
இதில் அவர் உடல் நசுங்கி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு மகேஷ் சர்மா லாரியை நிறுத்தினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.