ஆன்மிகம்
பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

3 நாட்களுக்கு பிறகு திறப்பு: பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-08-17 02:54 GMT   |   Update On 2021-08-17 02:54 GMT
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தடுக்கும் வகையில் வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பெரிய கோவில்கள் மட்டுமின்றி சிறிய கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கோவில்கள் முன்பு கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

அதன்படி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கோவிலின் நுழைவு வாயிலான பாத விநாயகர் கோவில் முன்பு பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

இந்தநிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் குவிந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றிய பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News