செய்திகள்
கொரோனா பரிசோதனை

வெள்ளகோவிலில் 131 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-09-13 14:33 GMT   |   Update On 2020-09-13 14:33 GMT
வெள்ளகோவிலில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலீசார்,மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்வோர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவிலில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலீசார்,மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்வோர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வெள்ளகோவிலில் போலீஸ்காரர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானதையொட்டி , நேற்று வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், காவலிபாளையம், கம்பளியம்பட்டியில் முகாம் அமைத்தும் போலீசார் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்வோர் உள்பட மொத்தம் 131 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News