செய்திகள்
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கோவையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை செல்வபுரம் அருகே உள்ள பனை மரத்தூரை சேர்ந்தவர் லலித் குமார். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 22). இவர் தனது தந்தை நடத்தி வரும் நர்சரி கார்டனில் வேலை செய்து வந்தார்
சுரேஷ்குமாருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி பல இடங்களுக்கு சென்றும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் இந்த காதல் விவகாரம் சுரேஷ்குமாரின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்பு தெரிவித்தனர். மேலும் இளம்பெண்ணுடனான காதலை கைவிடுமாறு கண்டித்தனர்.
இதனால் கடந்த சில நாட்களாக சுரேஷ்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சுரேஷ்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை செல்வபுரம் அருகே உள்ள பனை மரத்தூரை சேர்ந்தவர் லலித் குமார். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 22). இவர் தனது தந்தை நடத்தி வரும் நர்சரி கார்டனில் வேலை செய்து வந்தார்
சுரேஷ்குமாருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி பல இடங்களுக்கு சென்றும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் இந்த காதல் விவகாரம் சுரேஷ்குமாரின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்பு தெரிவித்தனர். மேலும் இளம்பெண்ணுடனான காதலை கைவிடுமாறு கண்டித்தனர்.
இதனால் கடந்த சில நாட்களாக சுரேஷ்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சுரேஷ்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.