செய்திகள்
கோப்புபடம்

செல்போனில் குழந்தைகளின் ஆபாச படம் பார்த்த எலக்ட்ரீசியன் கைது

Published On 2021-02-19 12:42 GMT   |   Update On 2021-02-19 12:42 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே செல்போனில் குழந்தைகளின் ஆபாச படம் பார்த்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்:

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழ்கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 30), எலக்ட்ரீசியன். இவர் தனது செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்த்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த சென்னை சைபர் செல் போலீசார், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியராஜை கைது செய்தனர்.
Tags:    

Similar News