செய்திகள்
அரிவாள் வெட்டு

மேலப்பாளையத்தில் இன்று வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

Published On 2020-08-29 15:54 GMT   |   Update On 2020-08-29 15:54 GMT
மேலப்பாளையத்தில் இன்று வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

மேலப்பாளையத்தில் உள்ள சிவராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற ராசப்பா (வயது31). இவர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் உள்ளன. நெல்லை, பாளையில் மட்டும் 10 திருட்டு வழக்குகள் உள்ளன.

இன்று அதிகாலை 1 மணி அளவில் ராஜா என்ற ராசப்பா மேலப்பாளையத்தில் உள்ள ஆமீன்புரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு ஆமீன்புரத்தை சேர்ந்த பிளம்பர் யாசர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் ராஜா என்ற ராசப்பாவிடம் எதற்காக நள்ளிரவு இங்கு வந்தாய் என்று கேட்டு தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த யாசர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து ராசப்பாவை சரமாரி அரிவாளால் வெட்டினார்கள். பலத்த காயம் அடைந்த அவர் அலறியப்படி கீழே விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கோல்டன் விஜய் மற்றும் போலீசார் விரைந்து சென்று ராசப்பாவை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் பிளம்பர் யாசர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News