செய்திகள்
கொரோனா வைரஸ்

நேற்று ஒரே நாளில் சென்னை போலீசில் 6 பேருக்கு கொரோனா

Published On 2020-09-16 18:59 GMT   |   Update On 2020-09-16 18:59 GMT
சென்னை போலீசில் நேற்று 6 பேர் மட்டும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
சென்னை:

சென்னை போலீசில் நேற்று 6 பேர் மட்டும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,381 ஆக உயர்ந்தது.

தீவிர சிகிச்சை பலனாக நேற்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு உள்ளிட்ட 18 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள்.

இதுவரை சென்னை போலீசில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 2,098 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பைவிட, குணமானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
Tags:    

Similar News