செய்திகள்
தற்கொலை

திருப்பத்தூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2020-01-13 11:32 GMT   |   Update On 2020-01-13 11:32 GMT
திருப்பத்தூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த வாலிபர் தூக்கில் மர்மமான முறையில் பிணமாக தொங்கினார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சந்தோஷ் (வயது25). வீடுகளுக்கு தகர மேற்கூரை அமைப்பவர்.

இவரது பக்கத்து வீட்டில் உள்ள 5 வயது சிறுமியிடம் அடிக்கடி பேசி பழகி விளையாடி வந்தார். அதேபோல் இவர் நேற்று மாலை சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சிறுமியை பாலியல் கொடுமை செய்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை தாங்க முடியாமல் தவித்த சிறுமி கண்ணீர் விட்டு அழுதபடி வந்து தனது பெற்றோரிடம் தெரிவித்தாள்.

சம்பவத்தை கேள்விப்பட்டதும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் உடலை பார்த்த போது பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்தன. அதை பார்த்த பெற்றோரும், உறவினர்களும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் சந்தோசை தேடினர்.

இந்த நிலையில் கிராமம் அருகே உள்ள மாந்தோப்பில் சந்தோஷ் பிணமாக தூக்கில் தொங்கினார்.

கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் பயந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து பெற்றோர் சிறுமியை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News