ஆன்மிகம்
முருகன் அலங்காரம்

திருமலைக்கேணி முருகன் கோவிலில் சஷ்டி பூஜை

Published On 2021-05-18 04:04 GMT   |   Update On 2021-05-18 04:04 GMT
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.
நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாத சஷ்டி பூஜை நேற்று நடந்தது.

இதையொட்டி முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.

மேலும் அருகே உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள தண்டபாணி சன்னதியிலும் பூஜைகள் நடைபெற்றது.
Tags:    

Similar News