செய்திகள்
30 ரூபாய் மதுவுக்காக உயிரோடு எரிக்கப்பட்டவர் உயிரிழப்பு
மதுரையில் 30 ரூபாய் மதுவுக்காக உயிரோடு எரிக்கப்பட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை:
மதுரை ஊமச்சிக்குளம், திருமால்புரத்தை அடுத்துள்ள கூழ்பாண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி முன்பு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
அதே இடத்தில் தள்ளுவண்டியில் ஊமச்சிக்குளத்தை சேர்ந்த அழகர், மீன் வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று மணிகண்டன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கி விட்டு அந்த பகுதியில் மறைவான இடத்தில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார்.
அப்போது அழகர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் மணிகண்டனிடம் தகராறு செய்தனர். மேலும் குடிபோதையில் இருந்த மணிகண்டன் மீது அழகர் பெட்ரோலை ஊற்றியதாகவும், உடனே அவர் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும், அழகர் அவரை விரட்டி சென்று தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் உடல் வெந்த நிலையில் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர் உள்ளிட்ட 4 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மணிகண்டன் நேற்று பரிதாபமாக இறந்தார். அதை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து போலீசார் கூறும் போது, சம்பவத்தன்று மணிகண்டனுக்கும், அழகருக்கும் மதுபானத்தை பங்கு வைப்பதில் தகராறு ஏற்பட்டது. அப்போது, “தனக்கு சிறிதளவு மது தரவேண்டும் என்று 30 ரூபாயை அழகர் கொடுத்துள்ளார். அந்த ரூபாயை பெற்றுக்கொண்ட மணிகண்டன் மது கொடுக்காத ஆத்திரத்தில், தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மணிகண்டன் உடலில் ஊற்றி தீவைத்துள்ளார். அவரையும், அவரது கூட்டாளிகளையும் தனிப்படையினர் தேடிவருகிறார்கள்” என்று போலீசார் தெரிவித்தனர்.
மதுரை ஊமச்சிக்குளம், திருமால்புரத்தை அடுத்துள்ள கூழ்பாண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி முன்பு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
அதே இடத்தில் தள்ளுவண்டியில் ஊமச்சிக்குளத்தை சேர்ந்த அழகர், மீன் வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று மணிகண்டன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கி விட்டு அந்த பகுதியில் மறைவான இடத்தில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார்.
அப்போது அழகர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் மணிகண்டனிடம் தகராறு செய்தனர். மேலும் குடிபோதையில் இருந்த மணிகண்டன் மீது அழகர் பெட்ரோலை ஊற்றியதாகவும், உடனே அவர் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும், அழகர் அவரை விரட்டி சென்று தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் உடல் வெந்த நிலையில் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர் உள்ளிட்ட 4 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மணிகண்டன் நேற்று பரிதாபமாக இறந்தார். அதை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து போலீசார் கூறும் போது, சம்பவத்தன்று மணிகண்டனுக்கும், அழகருக்கும் மதுபானத்தை பங்கு வைப்பதில் தகராறு ஏற்பட்டது. அப்போது, “தனக்கு சிறிதளவு மது தரவேண்டும் என்று 30 ரூபாயை அழகர் கொடுத்துள்ளார். அந்த ரூபாயை பெற்றுக்கொண்ட மணிகண்டன் மது கொடுக்காத ஆத்திரத்தில், தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மணிகண்டன் உடலில் ஊற்றி தீவைத்துள்ளார். அவரையும், அவரது கூட்டாளிகளையும் தனிப்படையினர் தேடிவருகிறார்கள்” என்று போலீசார் தெரிவித்தனர்.