தமிழ்நாடு
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய புறநோயாளிகள் பிரிவு திறப்பு

Published On 2022-04-15 10:02 GMT   |   Update On 2022-04-15 10:02 GMT
திருவாரூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய புறநோயாளிகள் பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
திருவாரூர்:

திருவாரூர் அருகே குழிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய புறநோயாளிகள் பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் காணொலி

மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெருந்தரக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் குழிக்கரை ஆரம்ப சுகாதார நிலைய புதிய

கட்டிடத்தில் திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கலைவாணன் குத்துவிளக்-கேற்றி சிறப்புரை ஆற்றினார்.மேலும் மாவட்ட சுகாதா-ரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ஹேமசந்த் காந்தி,

கொரடாச்சேரி ஒன்றிய துணைத் தலைவர் பாலசந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர்.கலியபெருமாள், பெருந்தரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன், பெருந்தரக்குடி

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளங்கனி ஸ்டாலின் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி கவியரசன் மற்றும் பெருந்-தரக்குடி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அருகாமை பகுதிகளை சார்ந்த ஊராட்சி

மன்ற தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியினை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மனோஜ்குமார் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்-சியில் முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.மதிவாணன் 

வரவேற்றார். இறுதியில் மருத்துவ அலுவலர் டாக்டர் ரஞ்சிதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News