செய்திகள்
ராகுல் காந்தி, அனில் விஜ்

ராகுல் காந்தி சிகிச்சைக்காக ஹரியானா மாநிலம் வரலாம்- அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி

Published On 2021-04-20 15:03 GMT   |   Update On 2021-04-20 15:03 GMT
டெல்லியில் சிகிச்சைக்காக இடம் கிடைக்க கஷ்டம் என உணர்ந்தால், ராகுல் காந்தி ஹரியானா மாநிலம் வரலாம் என அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹரியானா மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ், ராகுல் காந்தியை விமர்சனம் செய்வதுபோன்ற கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது குறித்து அனில் விஜ் கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய நாளில் இருந்தே ராகுல் காந்தி பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டுள்ளார். தற்போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.



டெல்லியில் அவருக்கு சிகிச்சை பெற இடம் கிடைப்பதில் கடினம் என உணர்ந்தால், அவர் ஹரியானவிற்கு வரலாம். அவருக்கு நாங்கள் சிறப்பான சிகிச்சை வழங்குவோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News