செய்திகள்
திமுக ஆட்சியில் அனைவரது பிரச்சினைகளும் தீர்க்கப்படும்- கேஎன் நேரு பேச்சு
தி.மு.க. ஆட்சியில் அனைவரது பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று மண்ணச்சநல்லூரில் நடந்த தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு பேசினார்.
மண்ணச்சநல்லூர்:
மண்ணச்சநல்லூரில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என். நேரு தலைமை தாங்கி, மண்ணச்சநல்லூர் தொகுதி தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். மண்ணச்சநல்லூர் தி.மு.க. வேட்பாளர் கதிரவன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கே.என்.நேரு பேசும்போது கூறியதாவது:-
தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தீவிரமாக கட்சி பணியாற்றுங்கள். தமிழக மக்கள் அடுத்த முதல்-அமைச்சராக தலைவர் ஸ்டாலினை முடிவு செய்து விட்டார்கள். எனவே தமிழகத்தில் அடுத்து அமைய இருப்பது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிதான்.
தி.மு.க. ஆட்சியில் அனைவரது பிரச்சினைகளும் தீர்க்கப்படும். எனவே நம்பிக்கையோடு அனைவரும் கட்சி பணியாற்றி நமது வேட்பாளர்களை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க பாடுபடுங்கள்
இவ்வாறு அவர்கூறினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வக்கீல் வைரமணி, காங்கிரஸ் கலை, ம.தி.மு.க. சேரன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய சேர்மன் ஸ்ரீதர், துணை சேர்மன் செந்தில்கார்த்திக்கேயன், ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.பி. இளங்கோவன், நீலமேகம்செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.