செய்திகள்
கைது

ஆலங்குடியில் கொலை வழக்கில் இளம்பெண் கைது

Published On 2019-11-28 14:00 GMT   |   Update On 2019-11-28 14:00 GMT
ஆலங்குடியில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி அருகே படேல் நகரில் ஒரு கார் அனாதையாக நின்றது. இது குறித்து பொதுமக்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை பார்த்த போது அதில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பது தெரியவந்தது. 

விசாரணையில் இறந்து கிடப்பது ஆலங்குடி அருகே உள்ள குளவாய்பட்டியை சேர்ந்த முத்துவின் மகன் கார்த்திக் என்பது தெரியவந்தது. இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து கடந்த ஒரு வருடமாக கொலையாளிகளை தேடி வந்தனர். 

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த குமராபாண்டி என்பவரின் மனைவி சித்ரா (வயது 33) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் சித்ரா, கார்த்திக்கை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசார் சித்ராவை புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற த்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News