ஆன்மிகம்
நாகூர் தர்கா

கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில் வெள்ளை முகூர்த்தம்

Published On 2021-11-26 03:56 GMT   |   Update On 2021-11-26 03:56 GMT
நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா அடுத்த ஆண்டு(2022) ஜனவரி மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா அடுத்த ஆண்டு(2022) ஜனவரி மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதை முன்னிட்டு நாகூர் தர்காவில் வெள்ளை முகூர்த்தம் (வர்ணம் பூசும் பணி) தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக அஸர் தொழுகை நடந்தது. இதை தொடர்ந்து நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஓதி வெள்ளை முகூர்த்தத்தை தொடங்கி வைத்தார்.

இதில் டிரஸ்டிகள், தர்கா ஆதீனங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News