செய்திகள்
பிரதமர் மயில்களுடன் பிஸி, நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் - ராகுல் காந்தி கிண்டல்
பிரதமர் நரேந்திர மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
இந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துவிடும், 10 லட்சம் நோயாளிகள் சிகிச்சையில் இருப்பார்கள். தனிமனிதரின் ஈகோ வை பாதுகாக்க அமல்படுத்தப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கு, நாட்டில் கொரோனவை பரவச் செய்து விட்டது.
மோடி அரசு தன்னிறைவு பெற்றதாக கூறுகிறது. நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பிரதமர் மயில்களுடன் பிஸியாக இருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.