ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

குப்பிச்சிபாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-04-29 06:45 GMT   |   Update On 2021-04-29 06:45 GMT
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சி பாளையத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட ராஜகணபதி மற்றும் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சி பாளையத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட ராஜகணபதி மற்றும் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த 23-ந் தேதி மூத்த பிள்ளையார் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து காப்புக் கட்டுதல், யாகசாலை வழிபாடு ஆகியவை நடந்தன.

தொடர்ந்து காலவேள்வி, தீர்த்த குடம் எடுத்தல், கோபுர கலசம் பிடித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கி கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள்.
Tags:    

Similar News