உள்ளூர் செய்திகள்
ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்த முயற்சி
வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே ஓடும் ரெயிலில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை:
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆழப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்துவதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அந்த ரெயிலில் சோதனை செய்தனர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கழிவறை அருகில் பை ஒன்று கிடந்தது. அதில் சுமார் 3.5 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.