செய்திகள்
கோப்புபடம்

‘ஸ்மைல்’ திட்டத்தில் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2021-09-02 09:29 GMT   |   Update On 2021-09-02 09:29 GMT
’ஸ்மைல்’ கடன் திட்டத்தில் ரூ.3 லட்சத்திற்கு மிகாத ஆண்டு வருமானம் உள்ள 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் கடன் பெறலாம்.
திருப்பூர்:

கொரோனா தொற்றால் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபர் இறந்ததால் சில குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் பாதிக்கப்பட்ட  பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ‘ஸ்மைல்’ திட்டத்தில் கடன் உதவி பெறலாம்.

இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

’ஸ்மைல்’ கடன் திட்டத்தில் ரூ.3 லட்சத்திற்கு மிகாத ஆண்டு வருமானம் உள்ள 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் கடன் பெறலாம். ஆண்டுக்கு 6 சதவீத வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் ரூ.5லட்சம் கடன் வழங்கப்படும். 

குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபர் கொரோனாவால் இறந்திருந்தால் அதற்கான சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 94454 77854 என்ற செல்போன் எண்ணையும், dbcwotpr@gmail.com என்ற இணையதளத்தையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News