செய்திகள்
போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போக்சோவில் கைது
போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி சந்தைப்பேட்டைத் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் குருமணி (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவியை காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார்.
பின்னர் அவரை திருமணம் செய்வதாக கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் குருமணியின் நண்பரான மாரியப்பன் மகன் ரமேஷ் (வயது 21) என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளனர்.
சிறுமியின் உடலில் மாற்றங்கள் தென்படவே அவரது பெற்றோர் விசாரித்த போது நடந்த விபரங்களை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குருமணி மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தேனி மாவட்டம் போடி சந்தைப்பேட்டைத் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் குருமணி (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவியை காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார்.
பின்னர் அவரை திருமணம் செய்வதாக கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் குருமணியின் நண்பரான மாரியப்பன் மகன் ரமேஷ் (வயது 21) என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளனர்.
சிறுமியின் உடலில் மாற்றங்கள் தென்படவே அவரது பெற்றோர் விசாரித்த போது நடந்த விபரங்களை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குருமணி மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.