செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகாடு:
வடகாடு அருகே மாங்காடு பூச்சி கடை மற்றும் புள்ளான்விடுதி கடைத்தெரு பகுதிகளில் வடகாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருதமுத்து, மரியதாஸ் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது புள்ளான்விடுதி மற்றும் மாங்காடு பூச்சிகடை பகுதிகளில் கடைகளில் வைத்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக, புள்ளான்விடுதி விடுதிதியை சேர்ந்த சேதுராமன் (வயது 40), மாங்காடு பூச்சிகடையை சேர்ந்த செல்வம் (55) ஆகியோரை கைது செய்தனர்.