செய்திகள்
மதுரை அருகே வெவ்வேறு சம்பவம்- வாகன விபத்தில் 2 பேர் பலி
மதுரை அருகே வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கோமதிபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகருப்பன்(வயது 60) . சம்பவத்தன்று இவர் மொபட்டில் மாட்டுத்தாவணி ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி முத்துகருப்பன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முத்துகருப்பன் பரிதாபமாக இறந்தார்.
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அப்பாஸ்(வயது 50). சம்பவத்தன்று இவர் சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் விளாங்குடி கரிசல்குளம் பகுதியில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முகம்மதுஅப்பாசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவங்கள் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.