செய்திகள்

திருமங்கலம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2018-12-03 10:46 GMT   |   Update On 2018-12-03 10:46 GMT
திருமங்கலம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பேரையூர்:

திருமங்கலம் அருகேயுள்ள கிழவனேரியைச் சேர்ந்த 5 வயது சிறுமி தனது அண்ணனுடன் அந்தப்பகுதியில் உள்ள மந்தையில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்தப்பகுதியைச் சேர்ந்த குமார் (17) என்பவர் அங்கு வந்தார். அவர் சிறுமியை அங்குள்ள மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதைப்பார்த்த சிறுமியின் சகோதரர் சத்தம் போட்டான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர்.

பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்ததும் குமார் ஓடிவிட்டார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

Similar News