செய்திகள்
விபத்தில் பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.16 ½ லட்சம் நஷ்டஈடு - மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வு
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாகராஜன் என்ற விவசாயி கயத்தாறு அருகே நடந்து சென்று கொண்டு இருந்த போது ஒரு தனியார் கல்லூரி பஸ் மோதி உயிரிழந்தார்.
நெல்லை:
லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நெல்லை கோர்ட்டில் நடைபெற்றது. மொத்தம் 9 தாலுகாக்களில் உள்ள தீர்க்கப்படாமல் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதற்காக 16 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. மொத்தம் 2,617 வழக்குளில் தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாகராஜன் என்ற விவசாயி கயத்தாறு அருகே நடந்து சென்று கொண்டு இருந்த போது ஒரு தனியார் கல்லூரி பஸ் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் சமரச தீர்வு காணப்பட்டு உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 16 ½ லட்சம் வழங்கப்பட்டது.
இதில் மக்கள் நீதிமன்ற சிறப்பு நீதிபதிகள் சபீனா, தீபா, உரிமையியல் நீதிபதி சுப்பையா, நீதித்துறை நடுவர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.