செய்திகள்
கோப்புப்படம்

அவனியாபுரத்தில் 7 நாய் குட்டிகள் வி‌ஷம் வைத்து கொலை

Published On 2021-07-15 10:18 GMT   |   Update On 2021-07-15 10:18 GMT
மதுரை அவனியாபுரத்தில் பிறந்து சில நாட்களே ஆன 7 நாய் குட்டிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவனியாபுரம்:

மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் இன்று அதிகாலை 7 நாய்க்குட்டிகள் துடிதுடித்து கத்தின. இதை கண்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது ஒரே இடத்தில் 7 குட்டி நாய்கள் பிறந்து சில நாட்களே ஆன குட்டி நாய்கள் துடிதுடித்து இறப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நாய் குட்டிகளுக்கு யாரோ வி‌ஷம் வைத்து கொலை செய்ததாக தெரிய வருகிறது.

தொடர்ந்து அவனியாபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் நிலையம் எதிரே உள்ள ஜே.பி.நகரில் இதுபோன்று 3 மாடுகளுக்கு வி‌ஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தெரியவந்தது.

தற்போது பிரசன்னா காலனி பகுதியில் ஒரே இடத்தில் 7 குட்டி நாய்களுக்கு வி‌ஷம் வைத்த சம்பவம் இந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

Tags:    

Similar News