செய்திகள்
பாடாலூர் அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை
பாடாலூர் அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மை (வயது 70). இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறி மங்கூன் கிராமத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் அங்கு சென்று வள்ளியம்மையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து, வள்ளியம்மை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.